தனியார் பள்ளி விடுதியில் பெண் அலுவலக உதவியாளர் தற்கொலை


தனியார் பள்ளி விடுதியில் பெண் அலுவலக உதவியாளர் தற்கொலை
x

தனியார் பள்ளி விடுதியில் பெண் அலுவலக உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அலுவலக உதவியாளராகவும், மேலும் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நடந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவரை மதியத்திற்கு பிறகு காணவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர், விடுதியை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்து பார்த்தபோது, சுபா ஆடலரசி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று சுபா ஆடலரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தீராத மன உளைச்சல் காரணமாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்று சுபா ஆடலரசி கைப்பட எழுதி, நேற்று முன்தினம் தேதியிட்டு கையொப்பமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சுபா ஆடலரசி உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருக்கு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story