மணவாளக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு ெபண் தற்கொலை


மணவாளக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு ெபண் தற்கொலை
x

மணவாளக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு ெபண் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை காலனியை சேர்ந்தவர் கணேஷ் (வயது42), கொத்தனார். இவருடைய மனைவி செல்வகுமாரி (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வகுமாரி, கணவரின் தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இதையடுத்து குடும்பத்தில் அடிக்கடி சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வகுமாரி சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வகுமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---


Next Story