பெண் தற்கொலை

திசையன்விளை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை மணலிவிளை அரிகிருஷ்ண நாடார் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 55). இவருக்கும், இவரது கணவருக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் லெட்சுமி, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





