விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்தார்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருகே உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் செம்புலிங்கம். பால் வியாபாரியான இவருடைய மனைவி முத்துமாரி (வயது 34). கணவன் -மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த முத்துமாரி சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு முத்துமாரி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story