விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களுக்கு சிவனேஷ் (19) என்ற ஒரு மகனும், லோகேஸ்வரி (17) என்ற ஒரு மகளும் உள்ளனர். விஜயலட்சுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த விஜயலட்சுமி கடந்த 20-ந் தேதி விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story