விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். பைக் மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி (வயது 52). இவர்களது மகன் சுபாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தில் கலைவாணி மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது கலைவாணி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் கலைவாணியை அவரது உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே கலைவாணி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைவாணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story