தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2023 11:39 PM IST (Updated: 4 July 2023 1:58 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் முனுகுரான் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மஞ்சுளா (வயது 34). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். கணவன்- மனைவி இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த மஞ்சுளா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார், மஞ்சுளாவின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story