தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு கருவேப்பம்பட்டி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா (33). இவர் கருவேப்பம்பட்டியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு நவீனா (16), சாதனா (11) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் வயிற்று வலிஅடிக்கடி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story