அரகண்டநல்லூர் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்


அரகண்டநல்லூர் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலைசாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 20 Aug 2023 6:45 PM GMT)

அரகண்டநல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் செய்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் குமார் (வயது 32). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால், 2-வதாக , திருக்கோவிலூர் சந்தப்பேட்டை கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் மாலதி ( 24) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெயப்பிரியா(6) என்கிற மகளும், மணிகண்டன்(5) என்கிற மகனும் உள்ளனர்.

மாலதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று, பிணமாக கிடந்த மாலதியின் பிரேதத்தை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செல்வராஜ் போலீசில் அளித்த புகாரில், தனது மகள் சாவில்சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story