தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

சமயபுரம்:

அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் அருகே உள்ள அடைக்கலபுரத்தை சேர்ந்தவர் ஜூலிசகாயமேரி (வயது 52). இவரது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள கல்பாளையம் காணிக்கை மாதா நகரை சேர்ந்த ஒருவரிடம் வேலை செய்து கொண்டு, அந்தப் பகுதியிலேயே தனது மகன் மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர் தனது கணவரின் நினைவாகவே இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜூலி சகாயமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story