தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

பள்ளிகொண்டா அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

பள்ளிகொண்டா அருகே உள்ள ஒதியத்தூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 40). இவரது மனைவி அஞ்சலி (38). இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். இந்தநிலையில், தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு நடந்துள்ளது. பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.

இந்த நிலையில் காலையில் வீட்டின் குளியலறையில் அஞ்சலி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சென்று அஞ்சலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story