தூக்குப்போட்டு பெண் தற்கொலை
![தூக்குப்போட்டு பெண் தற்கொலை தூக்குப்போட்டு பெண் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/1584949-suicide.webp)
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். அவருடைய மகள் நந்தினி (வயது 27). இவருக்கும் எழுமாத்தூர் பாண்டிபாளையத்தை சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டு்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. குணசேகரும், நந்தினியும் தற்போது சென்னிமலையில் உள்ள கருப்பணன் கோவில் பள்ளம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். குணசேகருக்கு குடிப்பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக நந்தினி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.