பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த ராம்குமார் என்பவருடைய மனைவி திருமலைச் செல்வி என்ற பத்திரகாளி (வயது 33). ராம்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை திருமலைச் செல்வி கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த திருமலைச் செல்வி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story