பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

மூலைக்கரைப்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சங்கரன் மனைவி அங்கம்மாள் (வயது 65). இவர் தனது கணவரை பிரிந்து அண்ணன் ஆறுமுகநயினார் (75) வீட்டில் நீண்ட காலமாக வசித்து வந்தார். அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அங்கம்மாள் நேற்று அதிகாலை தனது அறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story