தூக்குப்போட்டு பெண் தற்கொலை


ஒடுகத்தூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மகன் பாபு (வயது 42). இவரது மணனைவி சியாமளா. நேற்று முன்தினம் இரவு பாபவுக்கும், மனைவி சியாமளாவிற்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. தகராறு அதிகமானதால் பாபு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த சியாமளா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தபோது சியாமளா வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பாபு கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story