தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

ஈத்தாமொழி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ஈத்தாமொழி:

ஈத்தாமொழி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகராறு

ஈத்தாமொழியை அடுத்த தேரிமேல் விளையைச் சேர்ந்தவர் கோபி (வயது 37). கொத்தனாரான இவருடைய மனைவி கலா (34). இவர்களுக்கு கோபிகா (12) என்ற மகளும், பிரவீன் (13) என்ற மகனும் உள்ளனர். மதுப்பழக்கம் உடைய கோபி அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வாராம்.

இதுதொடர்பாக கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையிலும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபி கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து சென்று விட்டார். மேலும் வீட்டில் பிள்ளைகளும் இல்லை.

தற்கொலை

இந்தநிலையில் திடீரென கலா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த கோபிகா, தாய் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story