தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

ரத்தினகிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பவித்ரா மற்றும் அவரது கணவர் ராஜேஷ்குமாருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது பவித்ரா படுக்கை அறையில் உள்ள மினவிசிறியல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பவித்ராவின் தந்தை பெருமாள் ரத்தினகிரி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகள் பவித்ராவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி 3½ ஆண்டுகளே ஆவதால் பவித்ராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story