பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

நெமிலி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பாரதி (வயது 30). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட பாரதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story