பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கலசபாக்கம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த சொரக்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் சிவரஞ்சினி (வயது 26). இவருக்கும், கலசபாக்கம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த சிவரஞ்சனி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





