பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

மூலைக்கரைப்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

தூத்துக்குடி மாவட்டம் கெட்டியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). கூலி தொழிலாளியான இவரது 2-வது மனைவி இசக்கியம்மாள் (38). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் தனது மனைவியுடன் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சிந்தாமணி கன்னி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இசக்கியம்மாள் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இசக்கியம்மாள் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story