தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

கண்ணமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சித்ரா (வயது 21). இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, தகராறு காரணமாக கடந்த 12-ந் தேதி சித்ரா தூக்குப்போட்டு கொண்டார்.

உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமான 4 ஆண்டுகளில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் ஆரணி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story