போச்சம்பள்ளி அருகே பட்டாளம்மன் கோவில் கரக திருவிழா
கிருஷ்ணகிரி
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள வாணிப்பட்டி ஊராட்சி அம்மன் கோவில்பதி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் கரக திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், கங்கணம் கட்டுதல் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து பட்டாளம்மன் கூழ் ஊற்றுதல், மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தலை மீது தேங்காய் உடைத்தல், பட்டாளம்மன் கரகம் தலை கூடுதல், தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story