நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
![நிதி நிறுவன ஊழியர் தற்கொலை நிதி நிறுவன ஊழியர் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2022/11/01/954489-suicide-by-hanging.webp)
எரியோடு அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்
எரியோடு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 26). பட்டதாரியான இவர், எரியோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டில் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முத்துக்கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து, முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story