நிதிநிறுவன அதிபர் மாயம்


நிதிநிறுவன அதிபர் மாயம்
x

நிதிநிறுவன அதிபர் மாயம் ஆனார்.

கரூர்

கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தை சேர்ந்தவர் யஸ்வந்த் (வயது 33). இவர் நிதிநிறுவன அதிபர். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து யஸ்வந்த்தை அவரது உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து யஸ்வந்த் தந்தை ராமசாமி கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான யஸ்வந்த்தை தேடி வருகின்றனர்.


Next Story