கிருஷ்ணகிரியில் கார் தீப்பிடித்து எரிந்தது

கிருஷ்ணகிரியில் கார் தீப்பிடித்து எரிந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது கார் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரம் திடீரென்று காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்தது. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





