நாகரசம்பட்டி அருகே கோழிப்பண்ணை தீ வைத்து எரிப்பு


நாகரசம்பட்டி அருகே கோழிப்பண்ணை தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)
தர்மபுரி

காவேரிப்பட்டணம்,:

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே உள்ள நெடுங்கல்லை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 36). ராணுவ வீரர். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை வீராமலையில் உள்ளது. அந்த கோழிப்பண்ணை கடந்த 6 மாதங்களாக செயல்படவல்லை. இந்தநிலையில் நேற்று முனதினம் அந்த பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். இதில் அந்த பண்ணை முழுமையாக எரிந்து சேதமானது. இதுகுறித்து சிவக்குமார் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story