சேலையில் தீப்பிடித்து பெண் சாவு


சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
x

தஞ்சை அருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் அன்னை முத்தம்மாள் நகரை சேர்ந்தவர் செண்பகராஜா. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் தீ உடல் முழுவதும் பரவியதில் வலியால் துடித்த அவர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி இறந்தார். இது குறித்து மகேஸ்வரியின் தாயார் ராஜலட்சுமி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story