சிவகிரி வனப்பகுதியில் தீவிபத்து

சிவகிரி வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் சிவகிரி பீட், உள்ளார் பீட் வனப்பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது. அங்கிருந்த காய்ந்த செடி, கொடிகளில் பற்றிய தீ மள, மளவென எறிய தொடங்கியது.
தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது இந்த தீவிபத்து ஏற்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





