அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை

அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையிலான வீரர்கள் தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், இயற்கை இடர்பாடுகளின் போது செயல்பட வேண்டியவை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





