மகளிர் குழுக்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி


மகளிர் குழுக்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
x

திருப்பத்தூர் அருகே மகளிர் குழுக்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மகளிர் குழுக்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் அருகே உள்ள ராவுத்தம்பட்டி சமுதாய கூடத்தில் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு நார் தொழில் செய்வது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது நார் தொழில் செய்யும்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் தற்காத்து கொள்வது எப்படி, பிறரை காப்பாற்றுவது எப்படி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story