ரெயில் பயணிகளிடம் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம்


ரெயில் பயணிகளிடம் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
x

ரெயில் பயணிகளிடம் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக தீத்தொண்டு நாள் வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அழகானந்தம், சரவணன், சிங், செந்தமிழ்செல்வன் ஆகியோர் அடங்கிய வீரர்கள் செந்துறை ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், அந்த தீயை எவ்வாறு அணைப்பது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story