கையுந்து பந்து போட்டியில் முதலிடம்


கையுந்து பந்து போட்டியில் முதலிடம்
x

சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கையுந்து பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சித்தார்கோட்டையில் உள்ள முகமதியா மேல்நிலைப்பள்ளி அணியினர் கையுந்து பந்து போட்டியில் முதலிடத்தைப் பெற்றனர். மேலும் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.இவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.56 ஆயிரம் கிடைத்தது, மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை முகமதியா பள்ளிகளின் தலைவர் முகமது யூசுப், பள்ளியின் முன்னாள் தலைவரும் கல்வி கொடையாளருமான எஸ்.தஸ்தக்கீர்மகனும் பள்ளியின் இணைத்தலைவருமான எஸ்.டி.ஷாஜகான் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

இதுபோல் துணைத்தலைவர் அஹமது கபீர், ஜமாஅத் தலைவர் தவுபிக் கரீம், செயலாளர் சாகுல் ஹமீது. முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மைனுதின், செயலாளர் செய்யது அகமது கபீர்.சங்கத் தலைவர் முகமது இப்ராஹிம். செயலாளர் அர்ஷத், தலைமையாசிரியர் ஜவகர் அலி, உதவி தலைமைஆசிரியர்கள் சுரேஷ் பாபு, ஷாஜகான் சலீம், சித்தார்கோட்டை ஊராட்சி தலைவர் முஸ்தரிஜஹான்ரைசுதீன், மாவட்ட உடற்கல்விஅலுவலர் வசந்தி, மாவட்ட விளையாட்டுஆணையர் தினேஷ், மாவட்டச்செயலாளர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ்பாபு, அன்சாரி, நாச்சியப்பன்.ஆர்தர்.சாமுவேல், நாகூர்கனி. கார்த்திக், முகமதியா பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ் கனி உள்ளிட்டவர்கள் விளையாட்டு வீரர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.


Next Story