வேன் மோதி மீனவர் சாவு


வேன் மோதி மீனவர் சாவு
x

நாங்குநேரி அருகே வேன் மோதி மீனவர் இறந்தார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

குமரி மாவட்டம் அழிக்கால் கீழத்தெருவை சேர்ந்த மரியஜான் மகன்கள் மரியநிகில் (வயது 21), மரிய ரிச்சன் (23). மீனவர்களான இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள்களில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தில் பெட்ரோல் பங்க்கிற்கு செல்வதற்காக நான்குவழிச் சாலையை கடந்துள்ளனர். அப்போது வள்ளியூர் நோக்கி சென்ற சரக்கு வேன், மரிய ரிச்சன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் மரிய ரிச்சன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story