நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு


நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு
x

சாயல்குடி அருகே நடுக்கடலில் மீனவர் திடீரென்று இறந்தார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்தவர், மைக்கேல் (வயது 44) இவர் மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்று இருந்தார். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக விசைப்படகை மூக்கையூர் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, மைக்கேல் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த வாலிநோக்கம் கடலோர போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story