மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக நேற்று மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சில மீனவர்கள் கரையோர பகுதிகளில் சிறியரக பைபர் படகு மூலம் மீன்பிடித்தனர். பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





