கடம்பகுளத்தில் மீன்பிடி திருவிழா


கடம்பகுளத்தில் மீன்பிடி திருவிழா
x

அன்னவாசல் அருகே கடம்பகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

மீன்பிடி திருவிழா

அன்னவாசல் அருகே கடம்பராயன்பட்டியில் உள்ள கடம்பகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து அமோக விளைச்சல் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுதல். இந்த நிலையில் குளத்தில் நீர் வற்றியவுடன் குளத்தில் இருக்கும் மீன்களை பிடித்து கிராமமக்கள் சேர்ந்து மீன்பிடி திருவிழாவாக கொண்டாடி மகிழ்வதும் வழக்கம். இதனையடுத்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடந்தது. இந்த மீன்பிடி திருவிழா சகோதரத்துவத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையையும், சாதி, இன பாகுபாடு அற்ற தன்மையையும் தரும் ஒரு உன்னத நிகழ்ச்சியாகும்.

சமைத்து சாப்பிட்டனர்

இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு கச்சா, தூரி, வலை, சேலை உள்ளிட்டவற்றை குளத்தில் வீசி நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். பின்னர் பிடித்த மீன்களை பொது மக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Next Story