ராப்பூசல் பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா


ராப்பூசல் பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா
x

இலுப்பூர் அருகே ராப்பூசல் பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

மீன்பிடி திருவிழா

இலுப்பூர் அருகே ராப்பூசல் பெரிய குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து அமோக விளைச்சல் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுதல். இந்தநிலையில் குளத்தில் நீர் வற்றியவுடன் குளத்தில் இருக்கும் மீன்களை பிடித்து கிராமமக்கள் சேர்ந்து மீன்பிடி திருவிழாவாக கொண்டாடி மகிழ்வதும் வழக்கம். இதனையடுத்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது.

முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், குளத்து கரையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் கொண்டுவந்த கச்சா, தூரி, வலை, சேலை உள்ளிட்டவற்றை குளத்தில் வீசினர்.

சமைத்து சாப்பிட்டனர்

இதில் நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். இதையடுத்து வலைகளில் சிக்கிய மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்த மீன்பிடி திருவிழா சகோதரத்துவத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையையும், சாதி, இன பாகுபாடு அற்ற தன்மையையும் தரும் ஒரு உன்னத நிகழ்ச்சியாக உள்ளது.


Next Story