தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா
x

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா வாணியம்பாடிஅருகே ஜொப்ராபாத் பகுதியில் கொடியேற்று விழா நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா வாணியம்பாடிஅருகே ஜொப்ராபாத் பகுதியில் கொடியேற்று விழா நடந்தது.

வாணியம்பாடி தொழில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஜாப்ராபாத் பகுதியில் கொடியேற்று விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எச்.அசாதுல்லா என்கிற முன்னா தலைமை வகித்தார். வி.குமரகுரு, ஜி.செல்வமணி, கே.வெங்கடராமன், எஸ்.ஏ.முஹம்மத் சகாபுதின், எஸ்.வினோத் ஸ்ரீதரன், கே.பி.சீனிவாசன், எஸ்.அருண்குமார், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆர்.ஜெயகாந்தன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி.கிருஷ்ணன், மாவட்ட தலைவர் சி.கே.சுபாஷ், மாவட்ட பொருளாளர் ஏ.ஜி.எஸ்.செந்தில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் கே.பி.எஸ்.மாதேஸ்வரன் கலந்து கொண்டு பேரமைப்பு கொடியை கொடியேற்றி வைத்தார்.

விழா ஏற்பாடுகளை வணிகர் சங்க பேரமைப்பு உதயேந்திரம் பேரூராட்சி ஜாப்ராபாத், தும்பேரி ஊராட்சி ஒருங்கிணைப்பு குழு தலைவர் டி.ஆர்.ஜி.அக்ரம், செயலாளர் ஏ. வணங்காமுடி, பொருளாளர் ஏ.வி சரவணன், துணைத்தலைவர் எஸ்.பாரூக், துணைச் செயலாளர்கள் ஏ.வி. சங்கர், பி.மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ஆர்.எழிலரசன், துணை செயலாளர் வி.பி.சக்தி ஆகியோர் நன்றி கூறினர்.


Next Story