கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தேனி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது, கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில தினங்களாக, கொடைக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அருவியில் சீராக தண்ணீர் விழுந்தது.

இந்தநிலையில் நேற்று இரவு கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதையொட்டி அருவிக்கு செல்லும் வாசலின் முன்பக்க கதவு மூடப்பட்டது. மேலும் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரான பிறகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story