தேனி கும்பக்கரை அருவியில் நீர்வத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக தடை


தேனி கும்பக்கரை அருவியில் நீர்வத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக தடை
x

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், உள்ளே சென்று பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், அருவிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 4-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story