மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பூ வியாபாரி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பூ வியாபாரி பலி
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பூ வியாபாரி உயிரிழந்தார்.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவர் அகரம்சீகூரில் பூக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குன்னத்தில் உள்ள தனது உறவினருக்கு பூ கொடுக்க செல்வதாக, தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு நேரம் ஆகியும் ராஜேந்திரன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை கிழுமத்தூரில் இருந்து அத்தியூர் செல்லும் சாலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தவர் ராஜேந்திரன்தான் என்பதை உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராஜேந்திரனுக்கு சுசீலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story