பூக்கள் விலை உயர்வு


பூக்கள் விலை உயர்வு
x

பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் விளைந்தவுடன் பறித்து, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப்பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.100 க்கும், அரளி ரூ.150-க்கும், ரோஜா ரூ.250- முல்லைப் பூ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். உற்பத்தி குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story