பூக்கள் விலை உயர்வு


பூக்கள் விலை உயர்வு
x

பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பூக்கள் ஏல சந்தை

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.200-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.400-க்கும் ஏலம் போனது.

விலை உயர்வு

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.460-க்கும், சம்பங்கி கிலோ ரூ.160-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.250-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது. பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story