வைகாசி விசாகத்தையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு - பிச்சி கிலோ ரூ.1,500-க்கு விற்பனை


வைகாசி விசாகத்தையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு - பிச்சி கிலோ ரூ.1,500-க்கு விற்பனை
x
தினத்தந்தி 2 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:57 AM GMT)

வைகாசி விசாகத்தையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சிப்பூ விலை உயா்ந்து கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

வைகாசி விசாகத்தையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சிப்பூ விலை உயா்ந்து கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போ மூலம் பூக்கள் வருகின்றன. தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால், அவற்றை வாங்கி செல்ல குமரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

பிச்சிப்பூ...

மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.750-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.750 உயர்ந்து ரூ.1,500-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ.700-ல் இருந்து ரூ.700 உயர்ந்து ரூ.1400-க்கும் விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.120, மல்லிகை ரூ.700, சம்பங்கி ரூ.100, கனகாம்பரம் ரூ.400, வாடாமல்லி ரூ.50, துளசி ரூ.25, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.30, கோழிப்பூ ரூ.60, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.10, பட்டன் ரோஸ் ரூ.100, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.300, மஞ்சள் கேந்தி ரூ.60, சிவப்புக்கேந்தி ரூ.65, சிவந்தி மஞ்சள் ரூ.120, சிவந்தி வெள்ளை ரூ.150, கொழுந்து ரூ.90, மருக்கொழுந்து ரூ.100 என விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், இன்று (அதாவது நேற்று) வைகாசி விசாகம் என்பதால் பூக்கள் தேவை அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது என்றார்.


Next Story