மதுரையில் பூக்கள் விலை உயர்வு


மதுரையில் பூக்கள் விலை உயர்வு
x

ஆடி பவுர்ணமியையொட்டி மதுரையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

மதுரை

ஆடி பவுர்ணமியையொட்டி மதுரையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

வரத்து அதிகரிப்பு

மதுரை மல்லிகை பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. திருவிழா காலங்களில் அதன் விலை உச்சத்தை தொடும். ஆனால் கடந்த சில தினங்களாக வரத்து அதிகரிப்பு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை குறைவாக இருந்தது.

அதன்படி, கடந்த ஒரு வாரமாக மல்லிகை விலை 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. மற்ற பூக்களான பிச்சி, சம்பங்கி, செவ்வந்தி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் விலையும் குறைவாக இருந்தது.

விலை அதிகரிப்பு

இந்த நிலையில் இன்று ஆடி பவுர்ணமி தினம் என்பதாலும், ஆடி 18 வருவதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் நேற்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

மேலும் சம்பங்கி ரூ.300, பிச்சிப்பூ ரூ.500, செவ்வந்தி, அரளி ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.200 என விலை போனது. மற்ற பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில தினங்களில் ஆடி 18 வர இருப்பதால் பூக்களின் விலை இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story