போக்சோவில் பூ வியாபாரி கைது


போக்சோவில் பூ வியாபாரி கைது
x
தினத்தந்தி 18 Aug 2022 5:28 PM GMT (Updated: 18 Aug 2022 5:33 PM GMT)

நிலக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 24). பூ வியாபாரி. இவர், 10-ம் வகுப்பு படிக்கிற 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தரப்பில், விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.


Next Story