சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா


சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே பூவனூர் கிராமத்தில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற சிறப்புடையது. கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல் சாமுண்டீஸ்வரி அம்மன் இக்கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story