முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

ஆவுடையார்கோவில் அருகே முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பாண்டி பத்திரம் விநாயகர் கோவிலில் இருந்து பூக்களை தட்டுகளில் வைத்து பெண்கள் தங்களது தலையில் சுமந்தபடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் முத்துமாரியம்மனுக்கு மலர்களை செலுத்தி அம்மனை தரிசித்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





