பூச்சொரிதல் விழா


பூச்சொரிதல் விழா
x

நத்தம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்தினர்.

இதேபோல் ஆடி மாதத்தையொட்டி பகவதி, காளியம்மன், ராக்காயி, தில்லை காளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story