சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாங்குநேரியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாங்குநேரி:
நாங்குநேரியில் சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலை படியுடன் ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் நிரந்தர கால முறை ஊதியத்தோடு கூடிய பணியிடங்களை ஒதுக்கி தகுதியுள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு சங்க கூட்டமைப்பு ஒன்றிய தலைவர் வீரபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





